பாறுக் ஷிஹான்-
யாழ் முஸ்லீம்களின் பிரச்சினைகளை தீரக்கக்கூடிய ஒரே தலைவர் றிசாட் பதியுதீன். அவரின் முன்மாதிரியை தான் நானும் பின்பற்ற தொடங்கியுள்ளேன் என யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.
முஸ்லீம் மக்களின் மீள் குடியேற்றம் மற்றும் அவர்களின் அடிப்படை பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல் திங்கட்கிழமை (25) மாலை 4.30 மணியளவில் யாழ். ஒஸ்மானியாக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
இதன் போது கருத்து தெரிவித்த அவர்,
யாழ் முஸ்லீம் மக்களின் பிரச்சினை நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இழுத்தடிக்கப்படுவதை பார்த்து வேதனை அடைந்தேன். கடந்த காலங்களில் அம்மக்களின் பிரச்சினைகளிற்கு உரிய தீர்வுகள் காணப்படவில்லை. இந்நிலையில் தான் ஜனாதிபதியுடன் நடைபெற்ற உயர்மட்ட கூட்டம் ஒன்றில் யாழ் மாவட்ட முஸ்லீம்களின் மீள் குடியேற்றம் தொடர்பாக பேசியிருந்தேன்.
அதன் போது ஜனாதிபதி அமைச்சர் றிசாட் பதியுதினை காட்டி அம்மக்களை போன்று பாதிக்கப்பட்டவரும் றிசாட் தான் என கூறினார்.
எனவே தான் அமைச்சர் றிசாட் பதியுதீனுடன் இணைந்து அம்மக்களிற்கு தீர்வினை பெற்றுக்கொடுங்கள் என கேட்டுக்கொண்டார்.
இதன் பிரகாரம் யாழ் மாவட்ட செயலகத்தில் வைத்து முஸ்லீம் மக்களின் பல பிரச்சினைகளுக்குதீர்வு காணப்பட்டது.தீர்வு காணுவதற்காக முடிவெடுக்கப்பட்டது.
தற்போது யாழ் முஸ்லீம் மக்களின் பிரச்சினைகள் அமைச்சரின் ஊடாள கையாளப்பட்டு தீர்க்கப்படுவது குறித்த நம்பிக்கை மகிழ்ச்சியளிக்கின்றது.
இந்நிலையிலும் கூட அமைச்சர் அரசியலில் எதிர் கொள்கின்ற சவால்களையும் முறியடித்து வெற்றி பெறுவார் என அவர் மேலும் கூறினார்.
இதன் போது மக்கள் பணிமனை தலைவர் சுபியான் மௌலவி இந்நிகழ்வினை ஏற்பாடு செய்ததுடன் பல சிவில் மக்கள் பிரதிநிதிகள் பலரும் உரையாற்றினர்.