ஷாகுல் ஹமீட் முஹம்மத்-
இன்று 26.04.2016 கிழக்கு மாகாண சபை முன்பாக சம்பூர் திருகோணமலை மக்களின் எதிர்ப்பு கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை பசுமைத் திருகோணமலை அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.
இதில் முக்கியமாக இன்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர் திரு நாகேஸ்வரன் அவர்களினால் இன்றைய அமர்வில் சம்பூர் அனல் மின் நிலைய அமைவிற்கு எதிரான தனிநபர் பிரேரணை ஒன்றை சமர்ப்பிக்க உள்ளதை ஆதரித்தும் அப்பிரேரணைக்கு மற்றைய உறுப்பினர்கள் ஆதரவினை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியுமே மேற்கொள்ளப்படுவதாக ஏற்பட்டளர்கள் கலந்துகொண்டவர்கள் கருத்து தெரிவித்தனர்.
காலை 8.45 ஆரம்பிக்கப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின்போது அங்கு வருகைதந்த மாகாண சபை உறுப்பினர்களுக்கு ஆவணக் கையேடும் ஏற்பாட்டாளர்களால் வழங்கி வைக்கப்பட்டது.
இவ் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் முஸ்லிம் தமிழ் மக்கள் என பல்வேறு பிரதேசத்தில் இருந்தும் கலந்து கொண்டது குறிப்புடத்தக்க அம்சமாகும்.