யாழ் முஸ்லீம்களுக்கு மக்கள் பணிமனை தலைவரின் அவசர வேண்டுகோள்..!

பாறுக் ஷிஹான்-
மீள்குடியேற்றப் பயனாளிகள் வீட்டுத்திட்டத்தில் தவறவிடப்பட்டிருந்தால் மக்கள் பணிமனையினை நாடுமாறு அதன் தலைவர் மௌலவி. பி.ஏ.எஸ் சுப்யான் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய தற்போது யாழ்ப்பாணத்தில் மீள்குடியேறி வாழ்ந்து வரும் காணியுள்ள குடும்பங்களில் வீட்டுத்திட்டத்திட்டத்திற்க்காக விண்ணப்பித்தும் தங்கள் பெயர் கிராம உத்தியோகத்தரினால் வெளியிட்டுள்ள பெயர் பட்டியலில் வரவில்லையாயின் அவர் தங்களது முழுவிபரத்துடன் யாழ் மக்கள் பணிமனையில் ஒப்படைத்தால் இவ்விடயம் தொடர்பாக மேலதிக நடவடிக்கை எடுக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இது வரையில் யாழ்ப்பாணத்தில் மீள்குடியேறி வரும் மக்களில் காணியில்லாதவர்களும் மீள்குடியேற்றத்திற்க்காக பதிவினை மேற்கொண்டு விட்டு வெளிமாவட்டத்தில் வசிப்போரில் யாழ்ப்பாணத்தில் காணியில்லாதவர்களும் இதுவரையில் காணிக்கான விண்ணப்பத்தை தங்களது கிராம உத்தியோகத்தர் மூலம் விண்ணப்பித்திருக்காவிட்டால் உடனடியாக இவ்விண்ணப்பத்தை கிராம உத்தியோகத்தர் மூலம் மேற்கொள்ளவும். இதன் பிரதி ஒன்றை யாழ் மக்கள் பணிமனையில் ஒப்படைக்க முடியும்.

இது தவிர தங்களது சொந்த மாவட்டத்தில் மீள்குடியேற விருப்பம் இருந்தும் மீள்குடியேற்றப் பதிவினை இன்னும் மேற்கொள்ளாமலிருப்போர் எவ்வித தாமதமுமின்றி தங்களது பதிவினை மேற்கொள்ளுமாறும் தங்களுக்கு காணியிலிருந்து வீடு இல்லையெனில் வீடு தேவையென்றும் காணியும் வீடும் இல்லையெனில் காணியும் வீடும் தேவை என கிராம உத்தியோகத்தரிடம் விண்ணப்பிக்குமாறும் இச்சந்தர்ப்பத்தை தவறவிடவேண்டாம். இதன் பிரதி ஒன்றை யாழ் மக்கள் பணிமனையில் ஒப்படைக்கலாம் என கூறியுள்ளார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -