பன்றி தாக்கி பெண் ஒருவர் வைத்தியசாலையில்..!

க.கிஷாந்தன்-
ட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் - எரோல் தோட்டம் 06ம் இலக்க மலையில் தொழில் புரிந்து கொண்டிருந்த பெண் தொழிலாளி ஒருவர் பன்றி தாக்குதலுக்கு உள்ளாகி பலத்த காயங்களுடன் கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார்.

இந்த சம்பவம் 20.04.2016 அன்று காலை 11.00 மணி அளவில் இடம் பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பெண் தொழிலாளி அவரது பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த வேலையில் தேயிலை மலைக்குள் புகுந்த பன்றி குறித்த தொழிலாளியை தாக்கியதாக பாதிக்கப்பட்ட தொழிலாளி தெரிவித்தார்.

காடுகளில் உள்ள பன்றிகள் தோட்டப்பகுதிகளுக்கு வருவதனால் இவ்வாறான சம்பவங்கள் அதிகரித்து வருவதாக தோட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -