துருக்கி ஸிரியாவின் ஐ.எஸ்.ஐ.எஸ். நிலைகள் மீது செல் தாக்குதல்

துருக்கி இராணுவத்தினர் ஸிரியாவிலுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் நிலைகள் மீது செல் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக உள்ளுர் செய்திகள் திங்களன்று தெரிவித்தன.


துருக்கிய படையினர் சுமார் 50 தொடக்கம் 60 ஆட்டிலெறி மற்றும் செல்தாக்குதல்களை ஸிரியாவின் வடபகுதியான அலெப்போ மாகாணத்திலுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் நிலைகள் மீது மேற்கொண்டுள்ளனர்.


தற்காலிக யுத்த நிறுத்தம் சிரியாவில் அமுலில் உள்ளது. ஆனால், ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் இந்த யுத்த நிறுத்தத்திற்குள் உள்ளடக்கப்படவில்லை.


ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான சர்வதேச கூட்டணியில் அங்கம் வகிக்கும் துருக்கி பல வாரங்களுக்குப் பிறகு தீவிரவாதிகள் மீது மேற்கொண்ட முதலாவது தாக்குதல் இதுவாகும்.


ஐக்கிய நாடுகள் தலைமையில் ஸிரியாவில் தற்காலிக யுத்த நிறுத்தம் அமுலில் உள்ள போதிலும் ஐ.எஸ்.ஐ.எஸ் மற்றும் அல்-காயிதான் பங்காளிகளான அல்-நுஸ்ரா முன்னணி ஆகிய தீவிரவாதிகளுக்கும் இந்த யுத்த நிறுத்தம் பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.tamilsheeya
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -