மலையக மக்கள் முன்னணியின் சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டம் -படங்கள் இணைப்பு

க.கிஷாந்தன்-

லையக மக்கள் முன்னணியின் தொழிற்சங்க பிரிவான மலையக மகளிர் முன்னணி 22.03.2016 அன்று தனது கட்சியின் சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடியது. அட்டன் நகரில் கிருஷ்ணபவான் கலாச்சார மண்டபத்தில் கொண்டாடப்பட்ட மகளிர் தின விழாவில் பிரதம அதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கட்சியின் நிதி செயலாளருமான ஏ.அரவிந்தகுமார், மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் ஏ.லோறன்ஸ், மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.இராஜாராம், டாக்டர். கிஷான் மற்றும் முன்னணியின் உயர் மட்ட குழுவினர் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களும் பெருந்தோட்ட பகுதி பெண்களும் கலந்து கொண்டனர்.

கலை, கலாச்சார நிகழ்ச்சிகள் உள்ளடங்களாக தரம் ஒன்றில் கல்வி கற்கும் 100 மாணவர்களுக்கான வங்கி கணக்கு புத்தகம் வழங்கும் வைபவத்துடன் வைத்திய முகாம் உள்ளிட்ட தோட்ட அதிகாரிகள் இருவரின் கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -