மலையக மக்கள் முன்னணியின் தொழிற்சங்க பிரிவான மலையக மகளிர் முன்னணி 22.03.2016 அன்று தனது கட்சியின் சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடியது. அட்டன் நகரில் கிருஷ்ணபவான் கலாச்சார மண்டபத்தில் கொண்டாடப்பட்ட மகளிர் தின விழாவில் பிரதம அதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கட்சியின் நிதி செயலாளருமான ஏ.அரவிந்தகுமார், மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் ஏ.லோறன்ஸ், மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.இராஜாராம், டாக்டர். கிஷான் மற்றும் முன்னணியின் உயர் மட்ட குழுவினர் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களும் பெருந்தோட்ட பகுதி பெண்களும் கலந்து கொண்டனர்.
கலை, கலாச்சார நிகழ்ச்சிகள் உள்ளடங்களாக தரம் ஒன்றில் கல்வி கற்கும் 100 மாணவர்களுக்கான வங்கி கணக்கு புத்தகம் வழங்கும் வைபவத்துடன் வைத்திய முகாம் உள்ளிட்ட தோட்ட அதிகாரிகள் இருவரின் கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.