வித்யா படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட இருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்

புங்குடுதீவு பாடசாலை மாணவி படுகொலை தொடர்பில்  3 தினங்களிற்கு முன்னர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் மேலதிகமாக  கைது செய்யப்பட்ட இருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த கிழமை புங்குடுதீவு பகுதிக்கு கொழும்பில் இருந்து சென்ற குற்றப்புலனாய்வு பிரிவினர் அப்பகுதியை சேர்ந்த மாப்பிளை என்றழைக்கப்படும் நடராஜா குகநேசன்(வயது-38) மற்றும் உதய சூரியன் சுரேஸ்வரன் ஆகியோரை வித்தியா கொலை தொடர்பாக விசாரிக்க வேண்டும் என கைவிலங்கிட்டு அழைத்து சென்றனர்.

மேற்படி இருவரும் குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்ய சென்ற நிலையில் இக்கொலையுடன் தொடர்புபட்டதாக ஏற்கனவே கைது செய்யப்பட்ட 9 சந்தேக நபர்களுடனும் தொலைபேசி தொடர்புகளை வைத்திருந்த காரணத்தினால் கைது செய்வதாக அவ்விடத்தில் குறிப்பிட்டிருந்தனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்டிருந்த இருவரையும் தற்போது எவ்வித குற்றச்சாட்டுகளும் இல்லாத காரணத்தினால் விடுதலை செய்வதாக  அவர்களது உறவினர்களிற்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :