கணித விஞ்ஞான மற்றும் ஆங்கில ஆசிரியர் வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள்

எப்.முபாரக்-

கிழக்கு மாகாண பாடசாலைகளில் நிலவுகின்ற கணித விஞ்ஞான மற்றும் ஆங்கில ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப கிழக்குமாகாண பொதுச்சேவை ஆணைக்குழு விண்ணப்பங்களைக் கோரியுள்ளது.

கணித விஞ்ஞான பட்டதாரிகள் மற்றும் ஆங்கில டிப்ளோமாதாரிகள் இப்பதவிக்கு விண்ணப்பிக்க முடியும்.

திறந்த போட்டிப்பரீட்சையூடாக இந்நியமனங்கள் வழங்கப்படவிருக்கின்றன. இவர்கள் இலங்கை ஆசிரியர் சேவையின் 3-1(அ) மற்றும் 3-1(இ) தரத்திற்கு உள்வாங்கப்படுவார்கள்.

கிழக்கு மாகாணத்தின் மாகாணப்பாடசாலைகளில் 6-11 வகுப்புகளில் நிலவுகின்ற ஆசிரியர் தட்டுப்பாட்டை நிரப்புவதற்கே இப்புதிய ஆட்சேர்ப்பு இடம்பெறவிருக்கிறது.

விண்ணப்ப முடிவுத்திகதி 12.04.2016ஆகும் என கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் எச்.ஈ.டபிள்யு.ஜி.திசாநாயக்க தெரிவித்தார்.

மேலதிக தகவல்களுக்கு கிழக்குமாகாண இணையத்தளத்தை பார்வையிடலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -