தென்கிழக்குப்பல்கலை இஸ்லாமியக்கற்கைகள், அரபு மொழி பீடத்தின் ஏற்பாட்டில் மாபெரும் ஆய்வுக் கட்டுரைப் போட்டி


தென்கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள், அறபு மொழிப்பீடம் அபிவிருத்தி மற்றும் பயிற்சிகளுக்கான சர்வதேச கலாசார நிலையத்துடன் இணைந்து ஆய்வுக் கட்டுரைப் போட்டியினை நடாத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளது. இக்கட்டுரைப் போட்டி இலங்கை வாழ் பன்மைத்துவ சமூகங்களின் மத்தியில் சகவாழ்வைக் கட்டியெழுப்புதல் - ஓர் இஸ்லாமியக் கண்ணோட்டம்எனும் கருப்பொருளை மையமாகக்கொண்டு நடைபெறவுள்ளது.
இலங்கைப் பல்கலைக் கழகங்களில் இளமானிக் கற்கைநெறிகளை தொடர்ந்து கொண்டிருக்கும் உள்வாரி, வெளிவாரி மாணவ மாணவியர்கள் இப்போட்டியில் கலந்து கொள்ளலாம்.
போட்டியில் கலந்து கொள்வதற்கான நிபந்தனைகள்:
1. ஆய்வுக் கட்டுரைக்கான மொழி : தமிழ், சிங்களம், ஆங்கிலம் அல்லது அறபு (ஏதாவது ஒரு மொழியில்) ;
2. 3,000 சொற்களுக்கு குறையாததாக அமைதல்;
3. ஏற்கெனவே பிரசுரிக்கப்படாததாகவும்; ஆய்வுக் கடடுரையின் எழுத்தாக்கத்தரம் பேணப்பட்டதாகவும்;  இருத்தல்;
4. துறைத் தலைவரினால் உறுதிப்படுத்தப்பட்டிருத்தல், (Soft Copies ம்; அனுப்பப்படல் வேண்டும்)
5. தெரிவுசெய்யப்படும் கட்டுரைகள் புத்தகம் அல்லது சஞ்சிகையாக வெளியிடப்படும்.
போட்டியில் வெற்றி பெறுவோருக்கு பெறுமதியான பணப்பரிசில்களும் சான்றிதழும் வழங்கப்படும்
முதலாம் பரிசு - 35000.00
இரண்டாம் பரிசு - 25000.00
மூன்றாம் பரிசு - 15000.00
(ஒவ்வொரு மொழிக்கும் தனித்தனியான பரிசில்கள் உண்டு)
இப்போட்டிக்கான ஆய்வுக் கட்டுரைகள் அனுப்பவேண்டிய இறுதித்திகதி 04.04.2016 ஆகும்.; கட்டுரையின் கட்டமைப்பு தொடர்பான மேலதிக விபரங்களுக்கு :
இணையத்தளம் : http://www.seu.ac.lk/fia
மின்னஞ்சல்    : essaycompetitionfia@gmail.com
தொடர்பிலக்கங்கள்   : 0778887315 or 0772373524

கட்டுரைகள் அனுப்பவேண்டிய முகவரி :
செயலாளர்
ஆய்வுக் கட்டுரைப் போட்டி
இஸ்லாமிய கற்கைகள், அறபு மொழிப் பீடம்
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக் கழகம் – ஒலுவில்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -