தாஜுடீன் கொலை: ஆத்திரத்தில் நாமல்

தாஜூடீன் கொலை சம்பந்தமாக நடத்தப்படும் விசாரணைகளை ஊகங்களின் அடிப்படையில் நடத்த வேண்டாம் என தாம் கேட்டுக்கொள்வதாக நாடாளும்னற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பான விசாரணை முடிவுக்கு வரும் முன்னர், இந்த கொலையுடன் தனக்கு தொடர்பிருப்பதாக சில தரப்பினர் குற்றம் சுமத்துவதாகவும் சம்பவம் தொடர்பான விசாரணைகளை தான் அவதானித்து வருவதாகவும் நாமல் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் தாஜூடீன் கொலை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை கைது செய்ய போவதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் பொலிஸ் தலைமையகத்திற்கு உறுதிப்படுத்தி கூறவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

ஒரு நபரை கைது செய்யும் முன்னர், அந்த நபரை கைது செய்ய போவதாக பொலிஸார் கூறுவதில்லை. இவ்வாறு கைதுகள் எதிர்காலத்தில் நடக்கலாம் நடக்காமலும் இருக்கலாம் என ஊடகங்களிடம் கூறமுடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

அதேவேளை தாஜூடீன் கொலை தொடர்பில் 4 செல்போன்கள் மூலம் பெறப்பட்ட விபரங்களுக்கு அமைய கொலை தொடர்பான முக்கியமான பல தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸ் தலைமையகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த 4 தொலைபேசிகளும் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினர் பயன்படுத்தியது எனவும் தெரியவந்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -