எம்.ஐ.எம்.அஸ்ஹர்-
கல்முனை லெஜன்ஸ் விளையாட்டுக்கழகம் ஒழுங்கு செய்திருந்த கழக வீரர்களுக்கான வர்ண விருது வழங்கும் நிகழ்வு கடந்த புதன்கிழமை ( 6 ) கல்முனை அல் பஹ்ரியா மகா வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது.
கழகத்தின் தலைவர் எம்.எம்.ஜமால்தீன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி வர்ண விருது வழங்கும் நிகழ்வில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாகவும் , கல்முனை பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.கனி , கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.டபிள்யு.ஏ. கப்பார் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் , ஓய்வுபெற்ற அட்டாளைச்சேனை கல்வியல் கல்லூரி உடற்கல்வித்துறை விரிவுரையாளர் எம்.ஐ.எம்.முஸ்தபா விசேட அதிதியாகவும் கலந்து கொண்டனர்.
கல்முனை லெஜன்ஸ் விளையாட்டுக்கழக வீரர்களுள் கிறிக்கட் போட்டிகளின் போது தமது திறமைகளை வெளிக்காட்டி கழகத்திற்கு பெருமை சேர்த்த பல விளையாட்டு வீரர்கள் பதக்கம் அணிவிக்கப்பட்டு நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
வர்ண விழாவிற்கான சகல ஏற்பாடுகளையும் கழக உறுப்பினர்களுடன் இணைந்து கழக செயலாளர் ஏ.எல்.எம்.அஸீம் மேற்கொண்டிருந்தார்.






