மூதூரில் இரண்டாயிரம் மில்லி கிராம் கஞ்சாவை வைத்திருந்தவர் விளக்கமறியலில்..!

எப்.முபாரக்-
திருகோணமலை மூதூர் பிரதேசத்தில் 2000ம் மில்லி கிராம் கஞ்சாவைத் தம் வசம் வைத்திருந்த ஒருவரை இம்மாதம் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிவான் ஐஎன்.றிஸ்வான் ஞாயிற்றுக்கிழமை (17)உத்தரவிட்டுள்ளார். 

பொலன்னறுவை புதிய நகரம் பகுதியைச் சேர்ந்த வீரகே கென்றி லஸ்மன் வயது(35) என்பவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பச்சைநூல் பகுதியில் மணல் ஏற்றுவதற்கு சென்றிருந்த லொறி சாரதியொருவரே இரண்டாயிரம் மில்லி கிராம் கஞ்சாவை வைத்திருந்த போது மூதூர் பொலிஸார் அப்பகுதியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது கஞ்சா வைத்திருந்த நபரை சனிக்கிழமை (16)மாலையில் கைது செய்துள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

குறித்த சந்தேக நபரை பொலிஸார் மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். இச்சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -