கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஐவரை, செவ்வாய்க்கிழமை (19/01/2016) இரவு கைது செய்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்களுள் இரு பெண்களும் அடங்குவதாகப் பொலிஸார் குறிப்பிட்டனர். அக்கரைப்பற்று பிரதேசத்தில் அண்மைக்காலமாக நடைபெற்று வரும் கொள்ளைகள் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸார் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதைத் தொடர்ந்தே இச்சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள், அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்
