மாடறுப்பு விவகாரம் : முஸ்லிம் அமைச்சர்கள் பேசவில்லை - ராஜித

மாடறுப்பு விவகாரம், அரசாங்கத்தின் கருத்தல்ல என்று தெரிவித்த அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன, இது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கருத்தாகும். அவை தொடர்பில் ஆராயலாமே தவிர, அதுவொரு பிரச்சினையல்ல என்றும் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று வியாழக்கிழமை, அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நிறைவடைந்ததன் பின்னர், அங்கு குழுமியிருந்த ஊடகவியலாளர்களிடம் அலவளாவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த மாடறுப்பு விவகாரம் தொடர்பில் அமைச்சரவைக் கூட்டத்தின் போது, பேசுவதாக முஸ்லிம் அமைச்சர்கள் தெரிவித்திருந்தனர்.

ஆனால் அவர்கள் பேசவும் இல்லை, அவ்வாறு எதுவுமே நடைபெறவுவில்லை.

மாடறுப்பு தொடர்பில் ஜனாதிபதி கருத்துதெரிவித்துள்ளார். அதனை விவாதத்துக்கு உட்படுத்துவது உசித்தமானதாகும் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -