அமைச்சர் ரிஷாத் அதிகம் துள்ளுவதாகவும் அவருக்கு விரைவில் பாடம் புகட்டுவதாகவும் பொதுபல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது.
இலங்கையில் சிறுபான்மை மக்கள் நாட்டை எவ்வாறு ஆக்கிரமிப்பு செய்துள்ளார்கள் என்பது தொடர்பாக புத்தகம் ஒன்றை பொதுபல சேனா வெளியிட ஆயத்தமாகி வருகிறது இது தொடர்பாக நிகழ்வொன்றில் கருத்து வெளியிட்டுள்ள அவ்வமைபின் பொது செயலாளர் ஞான சார தேரர் இந்த கருத்தையும் முன்வைத்துள்ளதாக கொழும்பு முன்னணி சிங்கள இணையம் செய்திவெளியிட்டுள்ளது.
விலபத்து விவகாரம் மற்றும் வட்டரக்க தேரரை வர்த்தக அமைச்சில் மறைத்து வைத்ததாக ஏற்கனவே பொதுபல சேனாவுக்கும் அமைச்சர் ரிஷாதுக்கும் முருகல் உள்ள நிலையில் இந்த கருத்தை அவ்வமைப்பு வெளியிட்டுள்ளது.
