அஷ்பால் அல் குர்ஆன் அகடமியின் ஓராண்டு பூர்த்தி விழாவும் கலை நிகழ்ச்சியும்..!

எம்.வை.அமீர்-
சாய்ந்தமருது அஷ்பால் அல் குர்ஆன் அகடமியின் ஓராண்டு பூர்த்தி விழாவும் கலை நிகழ்ச்சியும் 2015-12-13ஞாயிற்றுக்கிழமை கமு/கமு/றியாலுல் ஜன்னாஹ் வித்தியாலய கேட்போர் கூடத்தில், அஷ்பால் அல் குர்ஆன் அகடமியின் பணிப்பாளர் ஏ.ஆர்.எம்.நளீம் தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வுக்கு பிரதம அதிதியாக இறக்காமம் பகுதி பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஐ.எல்.எம்.றஸீன் கலந்து மாணவ மாணவிகளுக்கு பரிசில்களையும் சான்றிதல்களையும் வழங்கி வைத்தார்.

கௌரவ அதிதிகளாக தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் ஏ.ஆர்.எம்.அன்சார் கமு/கமு/றியாலுல் ஜன்னாஹ் வித்தியாலய அதிபர் எம்.ஐ.சம்சுதீன் ஆகியோர் கலந்துகொண்டனர். சிறு மாணவ மாணவிகளின் இஸ்லாமிய வாசம் நிறைந்த கலைநிகழ்வுகள் சபையோரை மகிழவடைய வைத்தது.

பெற்றோர் பார்வையாளர்கள் பிரமுகர்கள் என சபை நிறைந்துகாணப்பட்டது.









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -