பதுளை, கோபோ தோட்ட தமிழ் மகா வித்தியாலய பரிசளிப்பு விழா கடந்தவாரம் பாடசாலை மண்டபத்தில் சிங்கப்பூரிலிருந்து வருகை தந்திருந்த சோமசுந்தரம், மரியாயின் புதல்வர் அன்பழகன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைளை ஊக்குவிப்பதற்காக பிரதம அதிதி அன்பழகன் தனது சொந்த நிதியிலிருந்து போட்டோ கொப்பி இயரந்திரம் மற்றும் ஆசிரியர் சீருடைகளை பாடசாலைக்கு வழங்கி வைத்தார்.
நிகழ்வில் அன்பழகனை பாடசாலை அதிபர் முத்தையா வசந்தகுமார் பொன்னாடை போர்த்தி கௌரவிப்பதையும், அன்பழகனின் வேண்டுகோளுக்கு இணங்க நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்படுவதையும் அதிபர், ஆசிரியர்களுடன் பிரதம அதிதியையும் இங்கு காணலாம்.




