இன நல்லுறவுக்கான கல்முனை பிரதேச அபிவிருத்தி கூட்டம்...!

ஹாசிப் யாஸீன்-
பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸின் ஆலோசனைக்கமைவாக கல்முனை தொகுதியின் மூன்று பிரதேச செயலகங்களையும் ஒன்றிணைத்து முதற்தடவையாக இன நல்லுறவை கட்டியெழுப்பும் நோக்கில் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை (04) கல்முனை இருதய நாதர் மண்டபத்தில் இடம்பெற்றது.

இக்கூட்டம் சாய்ந்தமருது, கல்முனை முஸ்லிம், கல்முனை தமிழ் பிரதேச செயலகங்களின் ஏற்பாட்டில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், ஸ்ரீலங்காமுஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில் இடம்பெற்றது.

இக்கூட்டத்திற்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ரீ.கலையரசன், சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், கல்முனை மாநகர பிரதி முதல்வர் ஏ.எல்.ஏ.மஜீத், மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி, உள்ளிட்ட கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள், திணைக்களத் தலைவர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரச உத்தியோகத்தர்கள், மதத் தலைவர்கள், விளையாட்டுக் கழங்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இப்பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் கல்முனை தொகுதிற்குட்பட்ட தமிழ், முஸ்லிம் பிரதேசங்களில் மேற்கொள்ளவுள்ள அபிவிருத்தி திட்டங்களை மக்கள் பிரதிநிதிகள், திணைக்களத் தலைவர்கள் இனங்கண்டு அதனை உடனடியாக ஒப்படைக்குமாறு பிரதி அமைச்சர் இதன்போது அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -