தெமட்டகொடை பகுதியில் இளைஞர் ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர நடாத்திய ஊடக சந்திப்பின் காணொளிகளை பொலிஸாரிடம் ஒப்படைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
குறித்த காணொளிகள் சட்டமா அதிபர் காரியாலயத்துக்கு வழங்கப்படவேண்டும் என கோரி வெல்லம்பிட்டிய பொலிஸார் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை பிரத்தியேகமாக விளக்கமறியளில் வைக்குமாறும் இதன் போது உத்தரவிடப்பட்டது.
