நல்லாட்சியில் அனைவருக்கும் பங்கு உண்டு - கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுடீன்

ரினோஸ் ஹனீபா-
செக்றோ ஸ்ரீலங்கா அமைப்பின் ஊடாக மூன்று மாத ஆங்கில பயிற்சியினை முடித்த மாணவர்களுக்கான சான்றிதழ் அண்மையில் சாய்ந்தமருது பரடைஸ் மண்டபத்தில் இடம்பெற்றது. 

செக்றோ ஸ்ரீலங்கா மற்றும் இமாம் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் கவுன்சலர் றினோஸ் ஹனீபாவின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட கௌரவ ஆரிப் சம்சுடீன் அவர்கள் தொடரந்தும் பேசுகையில் 

எமது நாட்டில் நடைபெறுகின்ற இவ்நல்லாட்சியில் பெரியோர்களுக்கு மாத்திரமல்ல இளைஞர் யுவதிகளான உங்களுக்கும் பங்கு உண்டு என தெரிவித்தார் மேலும் குறிப்பிடுகைளில் நீங்கள் எத்துறையில் இருந்தாலும் உங்களது பங்களிப்பினை இவ்வாட்சியின் முன்னேற்றத்திற்கு உதவ முடியும் அதே போன்று சமூகத்தின் கல்வி முன்னேற்றத்திற்காக நீண்டகாலம் இயங்கி வரும் இந்நிறுவனத்தின் முன்னேற்றத்தையும் பாராட்டுகின்றேன் என்று குறிப்பிட்டார். 

இந்நிகழ்வில் செக்றோ ஸ்ரீலங்காவினுடைய பொதுச் செயலாளர் அனீஸ், உதவித்தலைவர்களான அம்பாறை கச்சேரியின் திட்டமிடல் பிரிவின் உத்தியோகத்தர் எம்.எச் ஹசன் மற்றும் கவிஞர் ஸாஹிர் கரீம், நிறுவனத்தின் பொருளாலர் இலங்கை போக்குவரத்துச் சபையின் ஊழியர். எம்.ஐ.எம் நியாஸ் மற்றும் இமாம் விளையாட்டுக் கழகத்தின் உறுப்பினர்கள் உட்பட சான்றிதழ் பெற்ற 150 மாணவர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -