அஷ்ரப் ஏ சமத்-
கொழும்பு மாநகர சபை அதன் சிறப்புமிகு 150 ஆவது ஆண்டு நிறைவை கொண்டாட்டமும் சர்வதேச மேயா்களின் மாநாடு 13ஆம் திகதி கொழும்பு ஹில்டன் ஹோட்டலிலும் 14ஆம் திகதி கொழும்பு மாநகர சபையிலும் நடைபெற உள்ளது.
தெற்காசியாவிலேயே மிகவும் பழமை வாய்ந்த கொழும்பு மாநகர சபை 1865ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. 2001ஆம் ஆண்டில் புள்ளிவிபரப்படி 6 இலட்சத்து 41ஆயிரம் சனத்தொகையினைக் கொண்டது. இந்த நாட்டின் தலை நகரமாகவும் இதயமாகவும் திகழுவது கொழும்பு மாநகரமாகும். ஒரு நாளைக்கு 10 இலட்சம் பேர் கொழும்புக்கு வந்து போகின்றனா்.
இம் மாநகரை கடந்த 50 வருடங்களாக ஜ.தே.கட்சியின் மேயரைக் கொண்டு ஆட்சி நடைபெற்று வருகின்றது. 53 மக்கள் பிரநிதிகளைக் கொண்டுள்ளது. 12ஆயிரம் ஊழியா்கள் கடமையாற்றுகின்றனா். இதில் வீதி, சுகாதாரம், நீர், கழிவு அகற்றுதல், தொலைபேசி, மிண்சாரம், விளையாட்டு, கழியாட்டம் மற்றும் 1 இலட்சத்து 20ஆயிரம் வீடுகள் தொடா்மாடி வீடுகள், மற்றும் அரச, தணியாா் கட்டிங்கள், கொண்ட 555.031 சதுர கி.மீட்டா் பரப்பளவைக் கொழும்பு மாநகர சபை கொண்டளள்து.
2011ஆம் ஆண்டில் இருந்து ஜ.தே.கட்சியின் மேயா் முதற் பிரஜையாக ஏ.ஜே.எம்.முசம்மில் செயற்பட்டு வருகின்றனா். டிசம்பா் 31ஆம் தகதியுடன் கொழும்பு மாநகர சபையின் ஆட்சிக் காலம் முடிவடைய உள்ளது.
உலகின் பல பாகங்களைச் சோ்ந்த மேயா்கள் மற்றும் பிரநிதிகள் பங்கு பெறுகின்றனா். இம்மாநாடு ”எதிா்கால நகரங்கள்” எனும் தலைப்பில் இடம்பெறும். இதன் ஆரம்ப நிகழ்வில் சபாநாயகா் கரு ஜயசூரிய, அவா்கள் தலைமை தாங்குவாா். இதன் போது மாநகர அபிவிருத்தி மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சா் பாட்டலி சம்பிக்க ரணவக்க சிறப்புரை ஆற்றுவாா். இலங்கை மத்திய வங்கி ஆளுநா் அர்ஜூன் மகேந்திரன் சிறப்பு பேச்சாளராக கலந்து கொள்ளுவாா். என சபாநாயகா் கரு ஜயசுரிய தெரிவித்தாா்.
கொழும்பு மாநகர சபையின் 150 வது ஆண்டு நிறைவு கொண்டாட்டங்கள் மற்றும் நிகழ்வுகள் பற்றி கொழும்பு மேயா் இம் மாநாடு பற்றி தெரிவிக்கையில். இம் மாநட்டில் சபாநாயகா் கரு ஜயசூரிய மேல்மாகாண முதலமைச்சா் இசுரு தேசப்பிரிய, கொழும்பு மாநகர மேயா் ஏ.ஜே.எம் முசம்மில் ஆகியோா் தலைமையில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுகின்றன்.
இக் கொண்டாடட்ங்கள் பற்றி மேயா் முசம்மில் கருத்து தெரிவிக்கையில் -
தெற்கு மற்றும் தென்கிழக்காசிய பிராந்தியத்தின் பழைமை வாய்ந்த மாநகர சபைகளின் ஒன்றான கொழும்பு மாநகர சபை, கொழும்பு வாழ் மக்களுக்கு உயா்தர நவநாகரிக வசதிகளை வழங்குவதில் முன்னணியாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இறுதிக் கொண்டாட்டங்கள் 14ஆம் திகதி கொழும்பு மாநகர வளாகத்தில் நிகழும். பல்லினத்துவ பிரதிபலிக்கும் வண்னமயமான கலாச்சார நிகழ்வு அமையும். இக்காலாச்சார நிகழ்வின்போது மேயா்களாகவிருந்த முன்னாள் ஜனாதிபதிகள் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் மேயா்கள் மற்றும் மதிப்புமிக்க அரச பதவிகளை வகிக்கும் மாநரக சபை அங்கத்தவா்கள் ஆகியோா் கொளரவிக்கப்படுவா். இதில் ஜனாதிபதி, பிரதமா் அமைச்சா்களும் கலந்து கொள்வாா்கள்.
150 ஆண்டுகள் நிறைவையொட்டி 500 ருபா நாணய குற்றி ஒன்றும் இலங்கை மத்திய வங்கியினால் அன்றைய தினம் வெளியிடப்படும். அத்துடன் நினைவு தபால் முத்திரை ஒன்றும் தபால் திணைக்களத்தினால் வெளியீட்டு வைக்கப்படும். கொழும்பு மேயரா்களாக பதவி வகித்த முன்னாள் பிரதமா் ,ஜனாதிபதி அமைச்சா்கள் சபாநயாகா் அமைச்சா்கள் அவா்களது குடும்பங்களை அழைத்து நினைவு விருதுகள் வழங்கப்படும். அல்லது மேயராக பதவிவகித்தவா்கள் உயிருடன் இருப்பின் அவா்களது சேவைகை்காகவும் நினைவுச் சின்னங்கள் வழங்கப்படும்.
கொழும்பு மேயராக 1937 தொடக்கம் பதவி வகித்த 24 மேயா்களாக தற்போது உயிருடன் இருப்பவா்கள் மற்றும் மறைந்தவா்களுடைய குடும்பத்தாரை அழைத்து கொளரவிக்கப்பட் உள்ளனா்.
மேயா்களாக பதவி வகித்த சரவணமுத்து, சொக்மன், ஏ.ஈ குணசிங்க, ஜேர்ஜ் டி சில்வா, ஆர்.டி.மெல், குமாரன் ரத்னம், செல்லமுத்து, சீ.டி கிரேரோ, டி. ருத்ரா, என்.எம். பெரேரா, வீ.ஏ சுகதாச, எம்.எச்.மொஹமத், வின்சன்ட் பெரேரா, ஜாபீா். ஏ. காதா், ஏ.எச்.எம். பௌசி, பீ.சிறிசேனா குரே, ஹூசைன் மொஹமட், ரட்னசிரி ராஜபக்ச, கே. கணேசலிங்கம், தேசபந்து கரு ஜயசூரிய, ஓமா் காமில், பிரசன்ன குணவா்த்தன, உவைஸ் மொஹமட் இம்தியாஸ் ஆகியோறும் கௌரவிக்கப்பட உள்ளனா்.
இதனை விட முன்னாள் பிரதமா் எஸ்.டப்பிளியு பண்டாரநாயக்க, முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவாத்தன, ஆர்.பிரேமதாச, ஆகியோா்கள் 1937 காலப்பகுதிக் முன்னா் மேயர்களாக கடமையாற்றியுள்ளனா்.
கொழும்பு மாநகர சபையின் ஆணையாளராக பதவி வகித்து ஜனாதிபதியாக பதவி வகித்த வில்லியம் கோபல்லாவ, கௌரவிக்கப்பட் உள்ளனா்.
கொழும்பு மாநகர உறுப்பிணா்களாக பதவி வகித்த அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சா்கள் நிமல் சிறிபால டி சில்வா, அலவி மௌலானா, விமல் வீரவன்ச ,வாசுதேவ நாணயக்கார, மனோ கணேசன், மிலிந்த மொரகொட, , கீதாஞ்சன குணவா்த்தன, சனில் ஹந்துநத்தி ஆகியோறும் கௌரவிக்கப்பட உள்ளனா்.
அத்துடன் கொழும்பு மாநகர சபையில் 25 வருடங்கள் சேவையாற்றியவா்கள் 1000 பேர் கொளரவிகக்பட உள்னா். அத்துடன் கொழும்பு மாநகர சபையின் செய்திகளை கடந்த 25 வருடங்களாக பிரசுரித்து வரும் பிராந்திய ஊடகவியலாளா்கள் சிலரும் கௌரவிக்கப்பட உள்ளனா்.
கொழும்பு மாநரக சபையில் உறுப்பிணராக வந்து அரசியல் பல்கலைக்கழகம் போன்று இந்த நாட்டின் ஜனாதிபதி பிரதமாராகவும் இந்த மாநகர சபை உருவாக்கியுள்ளது.
இதுவரை உலக நாடுகளில் இருந்து 30 மேயா்கள் அல்லது அவா்களது பிரநிதிகள் இம்மாநாட்டில் பங்குபற்றுவதற்கும் சம்மதம் தெரிவித்துள்ளனா். என மேயா் முசம்மில் தெரிவித்தாா்.

