ஜெ.எம்.பாசித்-
இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் சாய்ந்தமருது தொழிற்பயிற்சி நிலையத்தில் 2014 முதலாம் தொகுதி மாணவர்களுக்கான NVQ LEVEL 3, 4 சான்றிதழ்கள் வழங்கும் வைபவம் 24.11.2015 அன்று தொழிற்பயிற்சி நிலைய பிரதான மண்டபத்தில் நிலையப் பொறுப்பதிகாரியும் தகவல் தொழில் நுட்ப தொடர்பாடல் போதனசிரிருமான ஏ.ஆதீம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சாய்ந்தமருது பிரதே செயலகத்தின் செயலாளர் அல்-ஹஐ் ஏ.எல்.எம்.சலீம் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
இங்கு கல்வி கற்ற சுமார் 35 மாணவ, மாணவிகளுக்கான NVQ Level 3,4 சான்றிதழ்களை மாணவர்கள் பெற்றுக் கொன்டதுடன். இங்கு பிரதம அதிதியாக கலந்துகொண்ட சாய்ந்தமருது பிரதேச செயலாளருக்கு விஷேட கெளவரவமும் வழங்கப்பட்டது