ஜனாதிபதியின் பதில் திருப்தி இல்லாவிடின் மரணத்தினை தழுவ வேண்டிவரும்....!

ஜனாதிபதியின் பதில் திருப்தியாக அமையாவிட்டால் மரணத்தைத் தழுவவேண்டிய நிலைமையே ஏற்படும் என சிறைச்சாலைகளில் இருந்து பிணையில் விடுதலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் தெரிவித்தனர். 

இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

இதன்போது உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து எதிர்வரும் திங்கட்கிழமை ஜனாதிபதி பதில் தருவதாக தெரிவித்துள்ளார். அது குறித்து உங்களின் நிலைப்பாடு என்ன என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். 

அதற்கு பதிலளிக்கையில், உண்ணாவிரதம் இருக்கும் கைதிகள் சிறைச்சாலைகளில் படும் அவலங்கள் வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு தெரியாது. அரசியல் கட்சிகள் அறிக்கையிடும் அரசியலை மேற்கொள்கின்றார்கள். அரசியல் கைதிகள் குறித்து ஆக்க பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. 

ஆயினும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதில் உறுதியான பதிலாக அமையாவிட்டால், உண்ணாவிரதம் இருக்கும் கைதிகள் மரணத்தினை தழுவவேண்டிய நிலமையே ஏற்படும் என்றும் அவர்கள் கூறினார். 

ஜனாதிபதியின் பதில் உண்ணாவிரதம் இருக்கும் கைதிகளின் வாழ்க்கையை தீர்மானிக்க கூடிய பதிலாக இருக்க வேண்டுமென்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -