06:22 PM - 2016ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்ட சமர்ப்பிப்பு நிறைவடைந்தது
06:10 PM - திறமையான கலைஞர்கள் தங்களின் அர்ப்பணிப்பின் ஊடாக உருவாக்கப்படும் ஓய்வூதிய சம்பள முறைமைக்கு 15 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும்.
06:09 PM - ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியன தொழிற்சங்கங்களின் இணக்கப்பாட்டுடன் மட்டுமே இணைக்கப்படும்.
05:59 PM - குழந்தைகளுக்கான பால்மாவின் விலை 100 ரூபாவினால் குறைக்கப்படும்.
05:58 PM - 11 அத்தியாவசியப்பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளன. உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், பால்மா, நெத்தலி, டின்மீன், பருப்பு, காஸ் மற்றும் மண்ணெண்ணை ஆகியவற்றின் விலையே குறைக்கப்படும்.
05:56 PM - தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி, 04 சதவீதமாக அதிகரிப்பு.
05:55 PM - மத்தல விமான நிலையம் சரக்குகளை கையாளும் கேந்திரமாக மாற்றப்படும்.
05:54 PM - பயன்படுத்தப்பட்டு இறக்குமதி செய்யப்படும் சலவை இயந்திரம், அலைபேசி மற்றும் தொலைக்காட்சிகளுக்குத் தடை.
05:52 PM - வெளிநாட்டு தூதரகங்களில் சேவையாற்றுகின்றவர்களுக்கு முறையாக பயிற்சி பெற்றுக்கொடுத்தல், அவர்களின் பிள்ளைகளுக்கான கல்வி செலவை அரசாங்கம் ஏற்பதற்கு நடவடிக்கை எடுக்கும்.
05:51 PM - களனி வெலி ரயில் தண்டவாளத்தை புனரமைப்பதற்காக 1,500 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படம்
05:48 PM - இலஞ்ச ஊழில் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
05:47 PM - கண்டி, மாத்தறை, நல்லூரில் மூன்று புற்றுநோய் வைத்தியசாலைகள் அமைக்கப்படும்.
05:47 PM - இரத்தம், கூழ்மப் பிரிப்பு மத்திய நிலையங்கள் 1,000 ஐ உருவாக்குவதற்கு 5,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும்.
05:46 PM - ஆங்கிலம், தமிழ் நாடகங்கள் மற்றும் திரைப்படங்களுக்கு வரி விலக்களிப்பு.
05:45 PM - வீதி விபத்துகளுக்கு 10,000 ரூபாய் தண்டம் விதிக்கப்படும்.
05:44 PM - 2016ஆம் ஆண்டிலிருந்து ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு புதிய ஓய்வூதியத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
05:39 PM - 75 வயது வரையான சகல பிரஜைகளுக்கும் வைத்திய காப்புறுதி வழங்குமாறு சகல காப்புறுதி நிறுவனங்களிடமும் கோருகின்றேன்.
05:36 PM - தென், கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலைகளை முகாமைத்துவம் செய்வதற்கு விசேட பிரிவு ஏற்படுத்தப்படும். அதற்கு முதலீடு செய்வதற்கு இணையுமாறு தனியார் துறைக்கு அழைப்பு விடுக்கின்றேன்.அதேபோல நுரைச்சோலை அனல்மின் நிலையத்தை பாதுகாப்பதற்கு பிரிவொன்று உருவாக்கப்படும். அதன் மூலமாக அதன் உரிமம் மாற்றம் பெறாது.
05:35 PM - பொலிஸ் நிலையங்களின் எண்ணிக்கையை 428 இலிருந்து 600 வரை அதிகரிப்பதற்கு 1,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
05:34 PM - 2 வருட காலத்துக்குள் பொலிஸ் அதிகாரிகளின் சம்பள முரண்பாட்டை நீக்குவதற்கு 3,000 ரூபாய் வழங்கப்படும்.
05:34 PM - பதுளை, திகன மற்றும் புத்தளம் ஆகிய இடங்களில் உள்ளூர் விமான நிலையங்கள் 03 நிர்மாணிக்கப்படும்.
05:34 PM - கொழும்பு கடற்கரை வீதியிலிருந்து பாணந்துறை வரையில் அதிவேக நெடுஞ்சாலை அமைக்கப்படும். இதற்கு 15,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
05:29 PM - சகல பல்கலைக்கழகங்களுக்கும் Wifi வசதி வழங்கப்படும். இதற்காக 300 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும்.
05:28 PM - கல்விக்கு 90,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். இது மொத்த உள்ளாட்டு உற்பத்தியில் 5.41 சதவீதமாகும்.
05:28 PM - பெருந்தோட்டப் பாடசாலைகளின் அபிவிருத்திக்காக 250 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
05:26 PM - அநுராதபுரம், யாழ்ப்பாணம், குருநாகல் வைத்தியசாலைகளுக்கு 3,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும். மின்னேரியாவில் சிறுநீரக வைத்தியசாலை நிர்மாணிப்பதற்கு 2,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும்.
05:16 PM - மாலேம்பே மாபொல பல்கலைக்கழகம் என்ற பெயரில் புதிய பல்கலைக்கழகத்தை உருவாக்கும் யோசனையை முன்வைக்கின்றேன். அதற்காக 3,000 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்படும்.
05:16 PM - கிளிநொச்சியில் பொறியியல், விஞ்ஞானப்பீடம் மற்றும் வவுனியாவில் விவசாயபீடம் உருவாக்கப்படும்.
05:13 PM - பல்கலைக்கழக மாணவர்கள், மடிகணினி கொள்வனவு செய்வதற்காக 30,000 ரூபாய் கடன் வழங்கப்படும்.
05:11 PM - பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கானமுதலீடு 15 சதவீதத்தால் அதிகரிக்கப்படும்.சகல பல்கலைக்கழக மாணவர்களுக்கும் 2018ஆம் ஆண்டளவில் தங்களுடைய முழுக்கல்விக்காலத்தையும் விடுதி வசதிகளுடன் கழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
05:10 PM - முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன அறிமுகப்படுத்திய பாடசாலை சீருடைக்காக வவுச்சர் முறைமை அறிமுகப்படுத்தப்படும்.
05:09 PM - பாடசாலைகளுக்குள் முறையான சுற்றுச்சூழலை ஏற்படுத்துவதற்காகவும் மாணவர் மற்றும் ஆசிரியர்களுக்கிடையில் தொடர்புகளை மேம்படுத்துவதற்காகவும் வகுப்பொன்றில் மாணவர்களின் எண்ணிக்கை 35ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
05:08 PM - அச்சடிக்கப்பட்ட புத்தகங்கள் மற்றும் இதழ்களுக்கான இறக்குமதி வரி முழுமையாக நீக்கப்படும்.
05:07 PM - 1,000 பாடசாலைகளுக்கான நூலகங்கள், ஆய்வுகூட வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்காக 15,000 மில்லியன் ரூபாய் வழங்கப்படும். கவனிக்கப்படாத பாடசாலைகளின் தரத்தை மேம்படுத்துவதற்காக 30 ஆயிரம் ரூபாய் மில்லியன் ஒதுக்கப்படும்.
05:07 PM - கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்காகவும் கற்பித்தல் செயற்பாட்டிலுள்ள ஆசிரியர்களுக்கு தொடர்ந்து பயிற்சிகளை வழங்குவதற்காகவும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். அத்துடன், புதிதாக ஆசிரியர் துறையில் இணைந்தவர்கள் முதல் 05 வருடங்களுக்கு கட்டாயம் பயிற்சி பெற வேண்டும். பிரதேச மற்றும் கிராமிய பாடசாலைகளுக்காக ஆங்கிலம், விஞ்ஞானம், கணிதம் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைசார் ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
05:06 PM - நாட்டிலுள்ள சகல பாடசாலைகளுக்கும் தேவையான சுகாதார வசதிகளை 2016ஆம் ஆண்டு இறுதிக்குள் ஏற்படுத்திக்கொடுப்பதற்கு நிதி ஒதுக்கப்படும்.
05:03 PM - தனியார் துறையினருக்கு குறைந்தபட்சம் மாதாந்தம் 2,500 ரூபாய் சம்பள அதிகரிப்பை வழங்குமாறு கோருகின்றோம்.
05:03 PM - கடன் அட்டைகளை பயன்படுத்தி உள்ளூர்ப் பொருட்களை கொள்வனவு செய்யப்படும்போது, அறவிடப்படும் 1.5 சதவீதமான முத்திரை வரி குறைக்கப்படும். வெளிநாட்டுப் பொருட்களை கொள்வனவு செய்யும்போது 2.5 சதவீத வரி அறவிடப்படும்.
04:59 PM - நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வாகன அனுமதிப்பத்திரங்கள் ஒழிக்கப்படும். அதேபோல், அரசாங்கத்தின் சகல வாகனங்களுக்கும் வரி கட்டப்பட வேண்டும்.
04:56 PM - சகல ஊழியர்களுக்கும் சம்பள கணக்கு அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை.
04:55 PM - மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டிக்கான விலை மதிப்புக்கட்டணம் 2,500 ரூபாய் ஆகும். காருக்கு 15,000 ரூபாய் விலை மதிப்புக்கட்டணம்.
04:54 PM - பாடசாலைகளில் சேர்க்கப்படுகின்ற சகல பிள்ளைகளுக்காகவும் சேமிப்புக் கணக்கு ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சகல வங்கிகளிடமும் நான் கேட்டுக்கொள்கின்றேன்.
04:53 PM - அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகின்றபோது, அரசாங்கத்துக்கு செலுத்தப்பட வேண்டிய சகல கொடுப்பனவுகளும் அரசாங்கத்தின் தனியான கணக்கின் ஊடாக செலுத்தப்பட வேண்டும்.
04:53 PM - மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டிக்கான விலை மதிப்புக்கட்டணம் 2,500 ரூபாய் ஆகும்.
04:49 PM - எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்படும்.
04:48 PM - திவிநெகும வங்கி, தேசிய சேமிப்பு வங்கியுடன் இணைக்கப்படும்.
04:46 PM - ஆடை, பாதணிகள் மற்றும் மின்சார உபகரணங்கள் உள்ளிட்ட 15 பொருட்களுக்கான இறக்குமதி வரி விலக்களிக்கப்படும்.
04:46 PM - காரைநகர், கல்முனை மற்றும் சிலாபம் உள்ளிட்ட மீன்பிடித் துறைமுகங்களை அபிவிருத்தி செய்ய 470 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும்.
04:42 PM - காலி கோட்டை அபிவிருத்திக்காக 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
04:41 PM - மண்ணெண்னை விலை 10 ரூபாவினாலும் கேஸ் விலை 150 ரூபாவினாலும் குறைக்கப்படும்.
04:39 PM - பொருளாதார மத்திய நிலையங்களை உருவாக்கி புதிய தொழில் வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை ஆரம்பிப்பேன்.
04:36 PM - சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக தெற்காசிய பொருட்களைக் கொள்வனவு செய்து, இலங்கையை கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை எடுப்பேன்.
04:36 PM - நாடாளுமன்றத்துக்கு அண்மையில் சர்வதேச கண்காட்சி மத்திய நிலையத்தை நிறுவுவேன்
04:35 PM - விருந்தோம்பல் துறையுடன் இணைந்துகொள்வதற்கு விரும்புகின்ற இளைஞர்களுக்கு பயிற்சி பாடம் அறிமுகப்படுத்தப்படும். ஆகக் கூடுதலாக 15,000 ரூபாய் பெறுமதியான பாடத்திட்டத்துக்கு அரசாங்கம் 50 சதவீதம் செலுத்தும்.
04:33 PM - சர்வதேச சந்தைக்கொள்ளைக்கு அமைவாக அரெிக்க சீனா ஜப்பான் தென்ஆபிரிக்க ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான முறைமையை இன்னும் வெற்றிகரமாக்குவதற்கு 2016ஆம் ஆண்டு முதல் ஜிஎஸ்பி பிளஸ் நிவாரணத்தை எதிர்பார்க்கின்றோம்
04:32 PM - கொழும்பு, யாழ்ப்பாணம், கண்டி, மட்டக்களப்பு மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் அரசாங்கக் காணிகளில் வீடுகளை நிர்மாணித்து குறைந்த விலையில் வழங்குவதற்கான முறைமை மேற்கொள்ளப்படும். அதற்காக அரசாங்க அதிகாரிகளுக்கு கடன் வழங்கப்படும்.
04:30 PM - உருக்கு, ஓடுகள், மாபிள் ஓடுகள் மற்றும் மலசலகூட உபகரணங்களுக்கான இறக்குமதி வரி குறைக்கப்படும்.
04:29 PM - கட்டட மற்றும் நிர்மாண பயிலுநர்களுக்கு மாதாந்தம் 10,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படும்.
04:28 PM - நிர்மாணப் பணிகளுக்கு பயன்படுத்த இறக்குமதி செய்யப்படும் உபகரணங்களுக்கான வரி விலக்களிக்கப்படும்.
04:27 PM - நிர்மாணப்பணிகளுக்காக வருகின்ற வெளிநாட்டு நிறுவனங்கள் உள்ளூர் நிர்மாண நிறுவனங்களுடன் இணைந்து செயற்படவேண்டும்.
04:26 PM - வீடு சொத்துகளுக்கான வரம்மை ஏற்படுத்துவதற்காக சட்டத்தில் மாற்றங்கள் அல்லது திருத்தங்கள் கொண்டு வரப்படும்.
04:25 PM - புதிய கிராம வீட்டுத்திட்ட முறைமை உருவாக்கப்படும். அதற்காக 4,500 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும். வீடொன்றுக்கு 03 இலட்சம் ரூபாய் கடன் வழங்கப்படும்.
04:21 PM - சேரிகளில் வாழும் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக, தனியார் துறையுடன் இணைந்து 15 இலட்சம் வீடுகள் நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
04:20 PM - பயன்படுத்தப்படாத காணிகளானது வீடுகள் நிர்மாணிப்பதற்கு பயன்படுத்தப்படும்.
04:20 PM - காணிக்காக வங்கி உருவாக்கப்படும்.
04:20 PM - ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வங்கிகளை நிறுவுவதற்கு 25 மில்லியன் ரூபாய் நிதி.
04:18 PM - இறக்குமதி அபிவிருத்திக்காக விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும்.
04:17 PM - உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டை பாதுகாப்பதற்கு சட்டம் கொண்டுவரப்படும்.
04:17 PM - எரிபொருள் சந்தை உருவாக்கப்படும்.
04:17 PM - புதிய இறக்குமதிப் பொறிமுறையை ஏற்படுத்துவதற்கு முதலீட்டு ஊக்குவிப்புச் சபை நடவடிக்கை எடுக்கும்.
04:04 PM - வெளிநாட்டவர்களுக்கு கூலி அடிப்படையில் காணி வழங்கப்படும்போது, அறவிடப்படும் வரி விலக்களிக்கப்படும்.
04:04 PM - போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சிறுவர் பாதுகாப்புக்காக 2000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்
04:02 PM - யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையேயான முரண்பாடுகளை இல்லாமல் செய்வதற்கு 3 வருடங்களுக்கு 4,000 மில்லியன் ரூபாய் வழங்கப்படும்.
04:00 PM - ஏற்றுமதியை மேம்படுத்துவதற்காக நிறுவனமொன்று உருவாக்கப்படும்.
04:00 PM - அரச நிறுவனங்கள் அனைத்தையும் 2018ஆம் ஆண்டு ஒரு வலயமைப்புக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.
03:59 PM - மீனவ மற்றும் விவசாய வலயத்தை உருவாக்குவதற்கு 2,000 மில்லியன் ஒதுக்கப்படும்
03:58 PM - தங்கம் இறக்குமதிக்கான உரிமப்பத்திரத்தை அறிமுகப்படுத்துவேன்.
03:58 PM - மாணிக்கக்கற்கள் ஏல விற்பனை இலங்கைக்குள் இடம்பெறுவதற்கு யோசனை ஒன்றை முன்வைக்கின்றேன்.
03:55 PM - அலங்கார மீன் தைத்தொழிலில் இளைஞர்கள் ஈடுபடுவதற்கு உந்துவேன்
03:53 PM - வவுனியாவில் புதிய பொருளாதார வலையம் உருவாக்கப்படும். கிராமிய விவசாயத்துக்கு உதவும் வகையில் சிறிய குளங்கள் மற்றும் ஏரிகள் புனரமைக்கப்படும். அதற்காக 2,000 ரூபாய் ஒதுக்கப்படும்.
03:52 PM - கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு கிராம சேவகர் பிரிவு கொத்தனி கிராமமமாக செயல்படுத்தப்படும். இதில் பொதுவசதிகள் அபிவிருத்தி செய்யப்படும். ஒரு கிராமத்துக்கு 1,500 ரூபாய் ஒதுக்குமாறு யோசனை முன்வைக்கின்றேன்
03:48 PM - பாக்கு சேகரிக்கும் வலயம் உருவாக்கப்படும். அந்த தொழிற்றுறையை மேம்படுத்துவதற்கு வணிக ரீதியில் பயிர் செய்வதற்காக அரசாங்கம் நிவாரணம் வழங்கும்.
03:47 PM - தேங்காய் உற்பத்தியை மேம்படுத்துவதற்காக 250 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும்
03:47 PM - தேயிலை தொழிற்சாலை மதீப்பீட்டைக் கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். சிலோன் ரீ என்ற பெயர் தொடர்ந்து இருப்பதற்கு அந்தப் பெயரை பொறிப்பது கட்டாயம் ஆக்கப்படும்
03:45 PM - உள்ளூர் கோழி இறைச்சி உற்பத்தியை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய கிழக்கு நாடுகள் உள்ளிட்ட புதிய சந்தைக்கு கோழிகளை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
03:44 PM - மீனவர்களின் காப்புறுதிக்காக ஒரு மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும்.
03:44 PM - உள்ளூர் பால் உற்பத்தியாளர்களை மேம்படுத்துவதற்கு 1,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும்.
03:42 PM - உள்ளூர் பால் தைத்தொழிலை மேம்படுத்துவதற்கு மற்றும் இறக்குமதியை குறைப்பதற்கு நான் மதிக்கின்றேன். எனினும், பால் விலை கூடியதுடன், யோக்கட் உள்ளிட்ட பொருட்களின் விலை குறைந்தன.
03:41 PM - பழவகை மற்றும் மரக்கறி கைத்தொழிலை மேம்படுத்துவதற்கு நிவாரணம் வழங்கப்படும். இவற்றுக்குத் தேவையான உபகரணங்களுக்கான இறக்குமதி வரி விலக்களிக்கப்படும்.
03:40 PM - நெல் விவசாயிகளுக்கு மட்டும் நிவாரணங்கள் வழங்கப்படும். பெரு மற்றும் சிறு விவசாயிகளை மட்டும் கருத்தில் கொண்டு அவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
03:39 PM - விவசாயிகள் மற்றும் நுகர்வோர் கூடுதலான பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்வதற்கு முறைமையொன்று அறிமுகப்படுத்தப்படும்.
03:36 PM - 2014ஆம் ஆண்டு அரிசி அறுவடை குறைந்திருந்தது. உரப் பாவனையினால் சிறுநீரக நோயாளர்களின எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக இன்னும் வாதப்பிரதிநிதிவாதங்கள் இடம்பெறுகின்றன.
03:36 PM - அரிசி ஏற்றுமதி வர்த்தகத்தை நோக்காகக்கொண்டு அரிசி உற்பத்தியாளர்களுக்கு உதவியளிக்கப்படும். அதற்காக வெளிநாட்டுச் சந்தையை அறிமுகப்படுத்துவதற்கு முறைமையொன்று தயாரிக்கப்படும்.
03:34 PM - கீரி சம்பாவுக்கு 50 ரூபாய், சம்பா நெல்லுக்கு 40 ரூபாய், நாட்டரிசி நெல்லுக்கு 38 ரூபாய் ஆகக்குறைந்த விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனூடாக அரிசி கிலோகிராம் ஒன்று 65 ரூபாய்க்கு நுகர்வுக்கு பெற்றுக்கொள்ளமுடியும்
03:33 PM - விவசாய அறுவடையின் போது விலைக் குறைப்பைத் தடுப்பதற்கு உயர்ந்த தரத்திலான களஞ்சியசாலைகள் உருவாக்கப்படும்
03:32 PM - புத்துயிராக்கம் இல்லாத இடங்களை தனியார் பிரிவுகளுக்கு பெற்றுக்கொடுத்து, அதனூடாக அதனை மேம்படுத்துவதற்காக 1,000 மில்லின் ரூபாய் ஒதுக்கப்படுகின்றது.
03:31 PM - பல்பொருள் அங்காடிகளில் சிறிய மற்றும் நடுத்தரக் கைத்தொழிலாளர்களுக்கு சிறிய இடத்தை வழங்குமாறு கோரிக்கை விடுக்கின்றேன்
03:30 PM - சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக்கர்கள் கடனை பெறும்போது பிணை வழங்குவதற்காக 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும்.
03:29 PM - பெரும் வணிக நிறுவனங்களின் வரியைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
03:29 PM - மிளகாய், செத்தல் மிளகாய், கிழங்கு உள்ளிட்ட விவசாயப் பொருட்களின் ஊடாக நாட்டை தன்னிறைவு வடிவத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
03:29 PM - விவசாய உபகரணங்களை இறக்குமதி செய்யும்போது, வரி நிவாரணங்கள் வழங்கப்படும்.
03:28 PM - புதிய விவசாயக் கொள்கையை ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் கவனம் செலுத்தியுள்ளனர்.
03:27 PM - நிகர, சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்கு கடன் வழங்குவதற்காக இணைந்த கூட்டுத்திட்டம் அமுல்படுத்தப்படும்.
