சமந்தா சற்று முன்னர் இலங்கை வந்தடைந்தார்..!

க்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர் சற்று முன்னர் இலங்கை வந்தடைந்தார்.

இலங்கை வருகை தந்துள்ள அவர் ஜனாதிபதி, பிரதமர் உட்பட உயர் மட்ட அதிகாரிகள் பலரை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

மேலும் ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்கா தூதுவர் சமந்தா பவர் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை சந்திக்கவுள்ளார்.

இந்த சந்திப்பு இன்று இரவு 07மணியளவில் விருந்துபசாரத்துடன் நடக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது சமந்தா பவரால் அறிக்கையொன்றும் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் ஊடகப்பிரிவால் லங்காசிறி செய்தி சேவைக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -