ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர் சற்று முன்னர் இலங்கை வந்தடைந்தார்.
இலங்கை வருகை தந்துள்ள அவர் ஜனாதிபதி, பிரதமர் உட்பட உயர் மட்ட அதிகாரிகள் பலரை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
மேலும் ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்கா தூதுவர் சமந்தா பவர் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை சந்திக்கவுள்ளார்.
இந்த சந்திப்பு இன்று இரவு 07மணியளவில் விருந்துபசாரத்துடன் நடக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது சமந்தா பவரால் அறிக்கையொன்றும் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் ஊடகப்பிரிவால் லங்காசிறி செய்தி சேவைக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
