க.கிஷாந்தன்-
மாத்தளை தெனியாய அக்குரஸ்ஸ பகுதியில் 17.11.2015 அன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற விபத்தில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தெனியாய அகுரஸ்ஸ பிரதான வீதியின் பிட்டபெத்தர தென்னபிட்ட என்ற இடத்தில் முற்பகல் நடந்த விபத்திலேயே குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
காலியில் இருந்து சிங்கராஜா வனாந்தரத்தை பார்வையிட 5 நபர்கள் அடங்கிய குழு ஒன்று 4 மோட்டார் சைக்கிள்களில் சென்ற போது, இவர்களில் ஒருவர் பிட்டபெத்தர தென்னபிட்ட என்ற இடத்தில் லொறியை முந்திச் செல்ல முற்பட்ட போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பிட்டபெத்தர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதன்போது, மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் குறித்த லொறியில் மோதியதுடன், சம்பவ இடத்திலேலே மரணித்துள்ளார். இந்த விபத்தில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 32 வயதான யூரி குட்சென்கோ (yurii kutsenko) என்ற திருமணமாகாத நபரே பலியாகியுள்ளார்.
விபத்து தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், பிட்டபெத்தர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



