முறையற்ற “ஹோர்ன்” பாவனைக்கு இன்றுமுதல் சட்ட நடவடிக்கை..!

திக சப்தம் வெளிப்படுத்தும் வாகனங்கள் தொடர்பில் சட்டத்தை நடைமுறைப்படுத்த கூட்டு சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை இன்று முதல் முன்னெடுக்கவுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.

சூழல் மாசடைவதனைத் தடுத்தல், மக்களுக்கு ஏற்படும் மன அழுத்தங்களைக் குறைத்தல் போன்றன இந்த நடவடிக்கையின் பிரதான நோக்கமாகும்.

கொழும்பு செபெஸ்டியன் மாவத்தையிலும் குணசிங்கபுர பஸ் தரிப்பு நிலையத்திலும் இன்று காலை இதற்கான நடவடிக்கைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

தேசிய சுற்றாடல் சட்டத்தின் கீழ் “வாகனங்களின் ஹோர்ன்” சப்தம் வெளிப்படுத்துவதற்கான வரையறைகள் தனித்தனியாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

இதனை மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சட்ட முரணான ஹோர்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் லால் மேர்வின் தர்மசிறி தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -