வரவு செலவுத்திட்டம் வாசிக்கும் சந்தர்ப்பத்தில் மஹிந்த வெளியேறிச் சென்றார் ஏன்..?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனக்கு வரவு செலவுத்திட்டம் புரியவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க நேற்று வரவு செலவுத்திட்ட யோசனையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.

குறித்த வரவு செலவுத் திட்டம் தனக்குப் புரியவில்லை என கூறிய பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்க்ஷ, வரவு செலவுத்திட்டம் வாசித்துக் கொண்டிருக்கும் சந்தர்ப்பத்திலையே அவையை விட்டு வெளியேறிச் சென்றார்.

புரியாத வரவு செலவுத் திட்டமொன்றை செவிமடுப்பதில் பயனில்லை எனவும் மஹிந்த ராஜபக்க்ஷ ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.

இதேவேளை, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவும் நிதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டம் புரியவில்லை என தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -