ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் மஹிந்தைக்கு நடப்பது என்ன..?

இணைப்பு 2:
செய்தியாளர்: அஸ்ரப் ஏ சமத்-
ன்று (20) காலை 08.30 மணிக்கு பண்டாரநாயக்க ஞாபகாா்த்த மண்டபத்தில் உள்ள ஜனாதிபதி விசாரணைக் கமிசன் முன் முன்னாள் ஜானாதிபதி மகிந்த ராஜபக்ச சுயாதீன தொலைக்காட்சியில் ஜனாதிபதி தோ்தல் காலத்தில் விளம்பரப்படுத்தப்ட்ட விளம்பரத்திற்கு உரிய கட்டணம் செலுத்தாதையிட்ட விசாரணையின் இனறும் ஆஜரானாா். 

அவருடன் பாராளுமன்ற உறுப்பிணா்கள் பேராசிரியா் ஜி. எல்.பீரிஸ், கெகிலிய ரம்புக்கல, நாமல் ராஜபக்ச, முன்னாள் ஜ.ரீ.என். தலைவா் அநுர சிறிவா்ததனவும் மற்றும் சட்டத்தரணிகளும் ஆஜரானாா்கள்

இங்கு 08-30 மணி தொடக்கம் 12.00 மணிவரை விசாரணை நடைபெற்றது. விசாரணையின் பின் முன்னாள் ஜனாதிபதி ஊடகங்களுக்க கருத்து தெரிவிக்கையில் இவ் விசாரணை மீண்டும் டிசம்பா் 17,18ஆம் திகதிகளில் பிற்போடப்பட்டுள்ளது. இவ் வழக்கில் எனது பக்கம் எவ்வித ஓழுங்கீனம் நடைபெறவில்லை. 

ஊடகவியலாளா் கேள்வி - தமிழ் அரசியல் கைத்திகள் விடுதலை செய்வதில் தங்களது கருத்து என்ன ?

பதில் - பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் இந்த நாட்டில் உள்ள பயங்கரவாதிகளை பிடித்து சிறையில் அடைத்தோம் ஆனால் இந்த நல்லாட்சி அரசு அவா்களை திறந்து வெளியில் விட்டுவிட்டு பயங்கரவாதிகளை அடக்கிய ரணவிரு ராணுவத்தினா் பிடித்து சிறையில் அடைக்கின்றனா்.

ஊகடவியலாளா் கேள்வி - இந்த வரவு செலவுத்திட்டத்தினைப் பற்றி உங்கள் கருதது - நான் இந்த நாட்டு மக்களுக்க விவசாயிகளுக்கு பசளை போன்ற பல நன்மைகள் செய்தேம். இவைகள் ஒன்றம் இந்த அரசு இல்லாமல் செய்துள்ளது.

இணைப்பு- 1
பாரிய மோசடி மற்றும் ஊழல் விசாரணை பிரிவிற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ சற்று முன்னர் பிரசன்னமாகியுள்ளதாக எமது அலுவலக செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

சுயாதீன தொலைக்காட்சி சேவைக்கு ஜனாதிபதி தேர்தல் காலப் பகுதியின் போது விளம்பரம் செய்தமைக்கான கட்டணத்தை செலுத்தாமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதியிடம் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன்படி, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள பாரிய மோசடிகள் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு மஹிந்த ராஜபக்ஸ நேற்றைய தினம் அழைக்கப்பட்டிருந்தார்.

எனினும், நேற்றைய தினம் அவர் ஆணைக்குழு முன்னிலையில் பிரசன்னமாகவில்லை. 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவும் ஆணைக்குழு முன்னிலையில் இன்று பிரசன்னமாகியுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

அத்துடன், சுயாதீன தொலைக்காட்சியின் பணிப்பாளரும் இன்றைய விசாரணைகளுக்காக பிரசன்னமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -