அரசியல் கைதிகள் தொடர்பில் இன்று தீர்மானம் – நீதி அமைச்சர்

டுத்து வைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களை விடுதலை செய்வது தொடர்பில் இன்று தீர்மானிக்கப்படும் என நீதிஅமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என நேற்று பல கருத்துக்கள் வெளியிடப்பட்ட போதும் இது குறித்து எந்தவொரு தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை,

இருப்பினும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வது குறித்து இன்று தீர்மானம் எடுக்கப்படும் என நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

குறித்த சந்தேகநபர்களை பிணையில் விடுதலை செய்வதா அல்லது அவர்களுக்கு புனர்வாழ்வளித்த பின்னர் சமூகமயப்படுத்துவதா என்பது குறித்து தீர்மானிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

தற்போது 200 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதோடு அவர்களில் சிலரை இரு கட்டங்களாக விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை நாடளாவிய ரீதியில் சிறைச்சாலைகளில் உளள் அரசியல் சிறைக்கைதிகள் தொடர்ந்தும் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -