மக்கள் பணிக்கு முன்னுரிமை வழங்காத உள்ளூராட்சி மன்றங்களுக்கு எதிராக சட்டவடிக்கை -முதலமைச்சர்


கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல உள்ளூராட்சி மன்றங்களும் 24 மணி நேரமும் மக்கள் பணிக்காக தயார் நிலையில் இருக்குமாறு முதலமைச்சர் சகல உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்களுக்கும் கட்டாய உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பெய்து கொண்டிருக்கும் அடைமழையால் பல பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகின்றது. அவைகளை ஏதேனும் ஒருமுறையில் நீரை வடிந்தோட வளிசெய்யவேண்டும். அல்லது மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றவேண்டும் அவர்களுக்கான சகல பாதுகாப்பு, உணவு போன்றவற்றை பிரதேச செயலங்களுடன் இணைந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

பொது மக்களுக்கான சேவைகளில் பொடுபோக்காக நடந்து கொள்ளும் உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள், உத்தியோகத்தர்களுக்கு எதிராக மிகவும் காட்டமான சட்ட நடவடிக்கை எடுக்கப் படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் மழை வெள்ளம் காரணமாக நுளம்பு அதிகரித்து குழந்தைகள், மற்றும் சிறுவர்களுக்கு இடைஞ்சலாக இருப்பதாலும், நுளம்புத் தொல்லையைத் தடுக்கவும் மருந்தூட்டப்பட்ட நுளம்பு வலைகள் வழங்குவதற்கும் முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் சம்மந்தப்பட்ட அதிகாரிகளைப் பணித்துள்ளதாக முதலமைச்சின் ஊடகச்செயலாளர் எஸ்.எல்.முனாஸ் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -