திருகோணமலை சேருவில -கந்தளாய் பிரதான வீதியில் விபத்து..!

எப்.முபாரக்- 
சேருநுவர கந்தளாய் பிரதான வீதியில் வேன் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் பலத்த காயங்களுக்குள்ளாகி கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இன்று ஞாயிற்றுக்கிழமை (18) அதிகாலையில் அல்லைப்பாலத்துக்கருகில் இவ்விபத்துச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக சூரியபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

வாகனம் ஒன்றைச் முந்திச் செல்ல முற்பட்ட வேளையில் எதிரே வேகமாக சென்ற வேனுடன் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் பலத்த காயங்களுக்குள்ளாகி உள்ளதாகவும், விபத்தில் காயங்களுக்குள்ளானவர் கந்தளாவைச் சேர்ந்த சமன் விஜயசிறி வயது (42) எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

வேனின் சாரதியை தடுத்து விசாரணைகள் மேற்கொண்டு வருவதாகவும் சூரிய புர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -