அட்டனில் மண்சரிவு - 50ற்கும் மேற்பட்டவர்கள் இடம்பெயர்வு..!

க.கிஷாந்தன்-
17.10.2015 அன்று இரவு அட்டன் சமனலகம பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இரவு 8 மணியளவில் ஏற்பட்ட இந்த சம்பவத்தினால் ஒரு வீட்டின் மீது மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த மண்சரிவினால் எவருக்கும் காயங்களோ, உயிராபத்துக்களோ ஏற்படவில்லை. 

எனினும் இப்பகுதியில் உள்ள 15 வீடுகளில் உள்ள 50ற்கும் மேற்பட்டவர்களை தற்காலிகமாக வேறு இடங்களில் தங்க வைக்க நடவடிக்கைகள் எடுத்திருப்பதாக அட்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கடந்த காலங்களில் மலையகத்தில் காணப்பட்ட வரட்சியான காலநிலை மாறி தற்போது பிற்பகல் வேளையில், அதிகளவான மழை காணப்படும் நிலையில் நீர் பாய்தோடியதால் மண் இறுக்கம் குறைவடைந்து சீமெந்தால் பாதுகாப்பாக கட்டப்பட்ட வேலியையும் உடைந்துக்கொண்டு இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த பகுதியில் ஏற்கனவே பல தடவைகள் மண்சரிவு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -