அட்டாளைச்சேனையின் அவலம்..!

அட்டாளைச்சேனையின்
அவலம்..

எங்களுக்கு தேவை
இனிமேல் அல்ல இன்று
ஒன்று பட்டு அவலம் போக்க
தேசிய பட்டியல் ஒன்று.

ஊர் சேர்ந்து மகிழ்வதற்கும்
ஊர் மானம் காப்பதற்கும்
தலை நிமிர்ந்து நிற்பதற்கும்
ஒன்று பட்டு வாழ்வதற்கும்
வாக்குறுதி நிலைக்கட்டும்.

30 ஆண்டு தாகம் 
எப்ப தீர்க்கும் தலைமை 
விழி உறங்கா காத்திருக்கம்
இன்னார்க்கு இழிவு என்று
இறைவன் நாட்டமிருக்கு
சிரிக்கும் கூட்டமும் காத்திரிக்கு.

போராளி மனங்குளிர
உலமாக்கள் உனை வரவேற்க
பெரியார்கள் தனை ஏற்க
சிறார்கள் வாழ்வு சிறக்க
தேசிய பட்டியல் ஒன்றிருக்கு.

ஊர் வலமாய் அழைத்தோம்
மேடையில் அமர வைத்தோம்
ஊர் அவலம் எடுத்துரைத்தோம்
வாக்குறுதி மட்டுமல்ல
வார்த்தைகளும் நிலைத்திருக்கு.

சுற்றமும் போராளி நற்பும்
நாற்திசை சூழ்ந்து மகிழும்
சுற்றி உனை பெருமை மிதக்கும்
கெட்டவர் மனமும் உனை கவரும்
வாக்குறுதி நிலைக்குமென்றால்.

கலங்காத அட்டாளைச்சேனை ஊரு
காத்திருந்து வலிக்குது அதன் இதயம்
கண்ணீர் விடும் அவலம் 
நிச்சயம் ஒரு நாள் வரும்
கை சேதம் என்று 
தலைமையும் ஒரு நாள் அழும்.

அக்கரை ஊர் கவிஞன்
ஏ.எச். ஜூனைடீன்
அட்டாளைச்சேனை
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -