புலி படம் மெய்சிலிர்க்க வைக்கிறது- தமன்னா

விஜய் நடிப்பில் வெளிவந்த ‘புலி’ படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. சிம்புதேவன் இயக்கியுள்ள இப்படத்தை பற்றி நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்த நிலையிலும், இப்படத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசித்து வருகின்றனர். 

அதேபோல், ‘புலி’ படத்தை பார்த்த திரையுலக பிரபலங்களும் விஜய்-யின் இந்த புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சமீபத்தில் இப்படத்தை பார்த்த நடிகை தமன்னா, ‘புலி’ படம் மெய்சிலிர்க்க வைப்பதாக கூறியிருக்கிறார். 

இதுகுறித்து அவர் கூறும்போது, ‘புலி’ படத்தை பார்த்தேன் அவ்வளவு அற்புதமாக இருக்கிறது. படத்தில் வரும் பிரம்மாண்ட காட்சிகளை பார்க்கும்போது மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் இருந்தது. இப்படி ஒரு படைப்பை கொடுத்த விஜய்க்கும் மற்றும் ‘புலி’ படக்குழுவினருக்கும் என் வாழ்த்துகள் என்று தமன்னா கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -