சாய்ந்தமருது ஏஜ் ஸ்டீல் விளையாட்டுக் கழகம் 6 விக்கட்டுகளால் வெற்றி..!

எஸ்.அஷ்ரப்கான்-
ருபதுக்கு இருபது சினேகபூர்வ கடினபந்து கிரிக்கெட் போட்டியில் சாய்ந்தமருது ஏஜ் ஸ்டீல் விளையாட்டுக் கழகம் 6 விக்கட்டுகளால் வெற்றியீட்டியது.

சாய்ந்தமருது பிளைங் ஹோர்ஸ் மற்றும் சாய்ந்தமருது ஏஜ் ஸ்டீல் விளையாட்டுக் கழகங்களுக்கிடையில் நேற்று (07) கல்முனை சந்தாங்கேணி பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் சாய்ந்தமருது பிளைங் ஹோர்ஸ் விளையாட்டுக்கழகம் வென்று முதலில் துடுப்பெடுத்தாடி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 122 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சாய்ந்தமருது ஏஜ் ஸ்டீல் விளையாட்டுக் கழகம் 14.4 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 127 ஓட்டங்களை பெற்று 6 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியது.

இப்போட்டியில் வெற்றிபெற்ற சாய்ந்தமருது ஏஜ் ஸ்டீல் விளையாட்டுக் கழக அணி சார்பாக முஹம்மட் அப்றாத்-35 ஓட்டங்களையும், அணித்தலைவர் முஹம்மட் றிழ்வான் 24 ஓட்டங்களையும் அதி கூடிய ஓட்டங்களாக பெற்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -