க.கிஷாந்தன்-
அட்டன் – நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காசல்ரீ நீர்த்தேக்கத்தில் மிதந்துகொண்டிருந்த நிலையில் ஆண் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இந்த சடலம் 29.09.2015 அன்று செவ்வாய்க்கிழமை மாலை 4 மணியளவில் மீட்கப்பட்டதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
நீர்த் தேக்கத்தில் சடலமொன்று மிதந்துகொண்டிருப்பதாக பிரதேச மக்களினால் பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து குறித்த இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டனர். சடலத்தில் காயங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
30 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரது சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதோடு, சடலம் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில் மரண விசாரணைகளின் பின் நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.