சிங்கள பௌத்தாகளை உதாசீனம் செய்து வருகிறது - பொதுபல சேனா

நல்லாட்சி அரசாங்கம் சிங்கள பௌத்தாகளை உதாசீனம் செய்து வருவதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி அரசாங்கம் சிறுபான்மை மக்களின் நலன்களை உறுதி செய்வதில் அர்ப்பணிப்பை காண்பிக்கும் போதும், பெரும்பான்மை சமூகத்தை கண்டு கொள்வதில்லை.மதகுருக்கள் அமைச்சர்களாக பதவியேற்கும் வித்தியாசமான நாடாக இலங்கை மாற்றமடைந்துள்ளது.

எமது அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தாது நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது நடைமுறைச் சாத்தியமற்றது.

குளிரூட்டப்பட்ட அறைகளில் அமைச்சர்களின் தோள்களில் கைபோட்டு சம்பாசனை செய்யும் பௌத்தப பிக்குகளுடன் நல்லிணக்கம் பற்றி பேசுவது நகைப்பிற்குரியது என அவர் தெரிவித்துள்ளார்.

கிருலப்பனை போதி மந்திரயவில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வில் அவர் இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -