சில மாடுகள் கைது..!

எம்.எம்.ஜபீர்- 
ட்டக்களப்பு மண்டூர் பிரதேசத்திலிருந்து சவளக்கடை பிரதேசத்திற்கு அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக கொண்டு வந்த மூன்று பசு மாடுகளையும், மூன்று பசுக் கன்றுகளையும், இவற்றைக் கொண்டு வந்த இருவரையும் நேற்று மாலை 15ஆம் கொளனி கஞ்சா வீதியில் வைத்து சவளக்கடை பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸ் நிலையப் பெறுப்பதிகாரி ஏ.எம்.எம்.நஜீப் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பாக நற்பிட்டிமுனையை சேர்ந்த ஒருவரும், 15ஆம் கொளியை சேர்ந்த ஓருவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மாடுகளும் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சவளக்கடை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் கைது செய்யப்பட்ட மாடுகளையும், சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களையும் கல்முனை நீதவான் நீதி மன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -