தன் தாயை காப்பாற்ற சென்று உயிரிழந்த மகன் பாயிஸ் -படங்கள்

ன்று பிற்பகல் கண்டி தெல்தோட்ட பகுதியில் மின்சார பாதுகாப்பு வேலியில் சிக்குண்டு உயிருக்கு போராடிய தன் தாயை காப்பாற்ற சென்று முஹமட் பாயிஸ் எனும் 45 வயது நபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

குறித்த நபர் சுமார் 6 மாதங்களுக்கு முன்னர் புனித இஸ்லத்தை தன் மார்க்கமாக ஏற்றுக்கொண்டிருந்தார்.

இஸ்லாத்தை தழுவிய பின்னர் பெரும்பான்மை இனத்தவரின் பல்வேறு பிரச்சினைகளுக்கும் முகம்கொடுத்து வந்த நிலையில் தன் தாயின் (சிங்களம்) வீட்டிலேயே தங்கி இருந்தார்,
எனினும் மார்க்க வழிபாடுகளில் மிக பேணுதலாகவும் இருந்து வந்துள்ளார்.

இன்று இடம்பெற்ற குர்பானி கடமைகளிலும் இவர் பங்குபற்றி தன்னால் இயன்ற பணிகளை செய்துள்ளார்.

இதனிடையே இவரின் ஜனாசாவை இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்வதற்கு அப்பகுதி பிக்குமார்கள் சம்மதம் தெரிவித்துள்ள போதும், அதனை பெளத்த மத முறைப்படியே அடக்கம் செய்ய வேண்டுமென அப்பகுதி அரச அதிகாரி ஒருவர் வற்புறுத்தி வருவதாகவும் அறிய கிடைக்கிறது.

முழுமையான விபரம் கிடைத்ததும் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம்

முஹமட் பாயிஸின் நல்லமல்கள் அங்கீகரிக்கப்பட்டு அவருக்கு மேன்மை மிக்க மறுமை வாழ்வு கிடைக்க உங்களோடு நாமும் பிரார்த்திக்கின்றோம்.
அல்மஷூறா-


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -