பொத்துவில் காணிகளை விடுவிக்க பிரதி அமைச்சர் ஹரீஸ் நடவடிக்கை

எஸ்.அஷ்ரப்கான்-

விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸூக்கும் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் துசித பீ. வணிகசிங்கவுக்குமிடையேயான சந்திப்பு (28) திங்கட்கிழமை அம்பாறை கச்சேரியில் இடம்பெற்றது.

இச்சந்திப்பின் போது பிரதி அமைச்சர் ஹரீஸ் மருதமுனையிலுள்ள மோட்டு வட்டை சுனாமி வீட்டுத்திட்டத்திலுள்ள 81 வீடுகளை பாதிக்கப்பட்ட மற்றும் வறிய மக்களுக்கு உடன் வழங்குவதற்கு முறையான நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்க அதிபரைக் கேட்டுக் கொண்டார்.

மேலும் பொத்துவில் விவசாயிகளின் கரண்கோ காணியினை செய்கை பண்ணுவதற்கு விடுவிப்பது சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டதுடன் இவ்விடயம் சம்பந்தமாக அரசாங்க அதிபர் தலைமையில் பொத்துவில், லகுகல பிரதேச செயலாளர்கள் மற்றும் வனவள அதிகாரிகளை அழைத்து பேசிய பின்னர் இக்காணிகளை வழங்குவது சம்பந்தமாக இறுதி முடிவுக்கு வருவது என தீர்மானிக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -