ஜனாதிபதி மைத்திரி ஒபாமாவை சந்தித்தார்..!

னாதிபதி மைத்திரிபால சிறிசேன அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை சந்தித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தின் 70ம் அமர்வுகளில் பங்கேற்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று பராக் ஒபாமாவை சந்தித்துள்ளார்.

அமெரிக்காவிற்கு விஜயம் செய்துள்ள அரச தலைவர்களுக்காக ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பகல் போசன விருந்துபசாரம் ஒன்றை வழங்கியுள்ளார்.

இந்த விருந்துபசாரத்தின் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமெரிக்கா ஜனாதிபதி பராக் ஒபாமாவை சந்தித்துள்ளார்.

மிகக் குறுகிய சந்திப்பாக இந்த சந்திப்பு அமைந்தது என அமெரிக்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -