சுலைமான் றாபி-
இம்மாதம் 07ம் திகதி முதல் 13ம் திகதி வரை நாடுமுழுவதும் செயற்படுத்தப்படவுள்ள உள்ளுராட்சி வாரத்தினை முன்னிட்டு நாளை (07) நிந்தவூர் பிரதேச சபையினரால் விஷேட நடமாடும் சேவை ஒன்று நிந்தவூர் 22ம் பிரிவில் அமைந்துள்ள சுகாதார சிகிச்சை நிலையத்தில் இடம்பெறவுள்ளது.
காலை 9.00 மணிமுதல் பி.ப 3.00 மணிவரை இடம்பெறவுள்ள இந்நடமாடும் சேவையில் பிரதேச சபையின் கடமைகளில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளும், நீரிழிவு, இரத்த அமுக்கம், கொலஸ்ரோல் உள்ளிட்ட ஏனைய நோய்களுக்கான சிகிச்சைகளும் இந்நடமாடும் சேவையில் வழங்கப்படவுள்ளதாக நிந்தவூர் பிரதேச சபையின் செயலாளர் எம். ஜௌபர் தெரிவித்தார்.
