மஹிந்த - மைத்திரி தரப்புக்கு இடையில் மோதல்...!

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கண்டி மாவட்ட உள்ளூராட்சி உறுப்பினர்கள் சந்திப்பு நேற்று இடம்பெற்ற வேளை, அங்கு மோதல் நிலை ஒன்று தோன்றியுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க மற்றும் அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்க தலைமையிலான இச் சந்திப்பு மத்திய மாகாண ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடமபெற்றுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதிக்கு நெருங்கிய தரப்பினர் கருத்து வெளியிடப்பட்டமையினால் இம் மோதல் நிலைமை தோன்றியுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியுடனான பங்கு கட்சிக்கு கடுமையாக கண்டனம் வெளியிடும் வகையில் கருத்து வெளியிட்டவர்கள் எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பெரிய அளவிலான தோல்வியை சந்திக்கும் என குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த தேர்தலின் போது முன்னணிக்கு வாக்களித்தவர்களில் பெரும்பான்மையினர் எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் சில காரணங்களுக்காக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு வாக்களிக்காமல் இருப்பதற்கான நிலைப்பாட்டில் உள்ளனர் என கூட்டத்தின் போது சில குறிப்பிட்டுள்ளனர்.

இரு தரப்பு உறுப்பினர்களையும் அமைதிபடுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோல்வியடைந்துள்ள நிலையில், அதிக நேரம் செல்லும் வரையில் இச் சந்திப்பு கூச்சல் குழப்பம் நிலையில் தொடர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -