சுலைமான் றாபி-
ஆண்டுதோறும் செப்டெம்பர் மாதம் 8ம் திகதி அனுஷ்டிக்கப்படும் சர்வதேச எழுத்தறிவு தினத்தினை முன்னிட்டு இன்று (08) நிந்தவூர் கமு/கமு/அல்-மதீனா மகா வித்தியாலயத்தில் சர்வதேச எழுத்தறிவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. இதில் பாடசாலை அதிபர் எஸ்.அஹமது, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்டோர்கள் இந்த நிகழ்வினை அனுஷ்டித்திருந்தனர்.
இம்முறை கிழக்கு மாகாண கல்வித் திணைகளத்தினால் "எழுத்தறிவு மற்றும் உறுதி மிக்க சமூகம்" எனும் தொனிப்பொருளில் சர்வதேச எழுத்தறிவு தினம் அனுஷ்டிக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கதாகும்.



