யு.எல்.எம். றியாஸ்-
சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட திவிநெகும பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
திவிநெகும திணைக்களத்தின் ஊடாக வழங்கப்படும் வாழ்வாதார அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் 160 குடும்பங்களுக்கு இவ் வாழ்வாதார உதவிகள்
வழங்கப்பட்டன.
திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் பிரதம அதிதியாக கலந்துகொண்டு வாழ்வாதார உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கி வைத்தார்.
சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் தலைமையில் ஜனாதிபதி கலாச்சார விளையாட்டு கட்டிடத்தொகுதியில் இவ் வைபவம் இன்று இடம்பெற்றது. (07.09.2015) இவ் வைபவத்தில் திவிநெகும திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

