கத்தார் வாழ் கல்முனை சகோதரர்களின் கவனத்திற்கு...!

முஹம்மட் அஜ்வத்-

த்தார் வாழ் கல்முனை சகோதரர்களின் ஒன்று கூடல் கடந்த ஜூலை மாதம் கத்தார் டோஹாவிலுள்ள BCAS உயர் கல்வி நிலையத்தில் நடைபெற்றது. இவ்வொன்றுகூடலின் போது கலந்துகொண்ட சகோதரர்களின் கூட்டு மஷூறாவின் நிமித்தம் கத்தார் வாழ் கல்முனை சகோதரர்கள் அனைவரையும் ஒன்றிணைப்பதன் தேவைப்பாடு உணரப்பட்டு அதற்கான முன்னெடுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

அதற்கமைவாக கத்தார் நாட்டில் பறந்து வாழும் கல்முனை சகோதரர்கள் அனைவரின் தரவுகளை பெற்றுக்கொள்ளும் செயற்திட்டம் முதற்கட்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆகவே கீழுள்ள Online Form (தரவுப் படிவத்தினை) பூர்த்தி செய்வதன் மூலம் உங்களது தரவுகளையும் நீங்கள் பதிவு செய்து கொள்ளமுடியும். அத்துடன் இது தொடர்பாக சக கல்முனை சகோதரர்களிடமும் தெரியப்படுத்தி அவர்களினது தரவுகளையும் உள்வாங்க எமக்கு பூரண ஒத்துழைப்புவழங்குமாறு வேண்டிக்கொள்கின்றோம்.

எதிர்காலத்தில் அனைத்து கட்டார் வாழ் கல்முனை சகோதரர்களையும் இணைத்து செயற்படுவதற்கும், சில ஆக்கபூர்வமான நகர்வுகளை எட்டவும் உங்களது இந்த தரவுகள் எமக்கு பெரும் ஆதரவாக இருக்கும்.

இன்ஷா அல்லாஹ் !.
இவ்வாறு கத்தார் வாழ் கல்முனை சகோதரர்களின் தரவுகளை பெற்று முனையூர் மக்களின் ஒற்றுமையுடனும், கைகோர்ப்புடனும் கடல் கடந்து வாழும் சகோதரர்களினால் எதிர்காலத்தில் ஆக்க பூர்வமான பல விடயங்களை எம்மை புழுதிஊட்டி வளர்த்த இம் முனையூர் மண்ணிற்கு கொண்டு செல்வதற்கு கல்முனை மண் ஈன்றெடுத்த சகோதரர்கள் அனைவரும் ஒத்துழைக்குமாறு வேண்டிகொள்கின்றோம். 

வெளிநாடுகளில் வசிக்கும் கல்முனையினை சார்ந்த துடிப்புள்ள ஒவ்வொரு சகோதரர்களும் எம்முடன் இணைந்து முனையூரின் மறுமலர்ச்சியையும், கௌரவத்தையும், நிலையான மேன்மையையும் பேணும் வகையில் எம்மை புழுதிஊட்டி வளர்த்த இம் மண்ணை தன்னிறைவடைய செய்ய ஒன்றிணைவோமாக !

கீழுள்ள Link இணை அழுத்துவதன் மூலம் விண்ணப்ப படிவத்தினைபெறமுடியும்.


நன்றி !!
இவ்வண்ணம்,
நிர்வாக கட்டமைப்பு உருவாகத்திற்கான குழு.


Data Collection of Qatar living Kalmunayan - 2015

The gathering of Qatar living Kalmunayan was held on July 2015. This meeting was organised at a very short notice with very limited fellow Kalmunayan. We regret our inability due to finding more spacious place to accommodate all our brethren.

Long felt need of bringing all Kalmunayan living in Qatar under one umbrella was emphasised by the participants. As an initial step on a Mashura, it was decided by body forming committee to gather and collect particular of all Kalmunayan living in Qatar facilitating them to contribute to the betterment of Kalmunai in social, cultural, educational and various other fields through an organisation. It is expected to render such services to Kalmunai in a more meaningful, useful and very productive ways.

Please upload your valuable information in the following URL enabling to link/bring all our Qatar living brethren under one umbrella. We also seek your valuable cooperation and assistance by sharing this information more and more among our Kalmunayan.

Please consult the following URL to update your valuable information;


Regards,
Body forming committee.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -