மஹிந்தவின் சூழ்ச்சிகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் சமலிடம்...!

தேசிய அரசாங்கத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தரப்பின் பல பொறுப்புகள் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்சவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ராஜபக்ச குடும்பத்தின் மூத்தவரான சமல் ராஜபக்ச ஊடாக மஹிந்த ராஜபக்ச தரப்பினரால் மேற்கொள்வதற்கு திட்டமிட்டிருக்கும் செயற்பாடுகளை இடைநிறுத்துவதே இதன் நோக்கம் என சுதந்திர கட்சியின் உள் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

மஹிந்த ராஜபக்ச தரப்பினர் தேசிய அரசாங்கத்திற்கு எதிராக நாடாளுமன்றத்தினுள் தனியாக ஒரு செயற்பாட்டினை மேற்கொள்வதற்கும் அதன் ஊடாக அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்கும் திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சமல் ராஜபக்ச, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இருப்பது அரசாங்கத்திற்கு சாதகமாக இருப்பதோடு, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முழுமையான இணக்கப்பாடுகளுக்கமைய இவ் பொறுப்பினை சமல் ராஜபக்ச ஏற்று கொண்டுள்ளார் என தகவல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறு மஹிந்த ராஜபக்சவின் செயற்பாடுகளை கட்டுபடுத்தும் நடவடிக்கைகளை தன்னால் மேற்கொள்ளப்படும் என சமல் ராஜபக்ச உத்தியோகபூர்வமற்ற சான்றிதழ் ஒன்றினையும் வழங்கியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.#tamilwin
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -