ஹிஸ்புல்லாஹ்வுக்கு தேசியப்பட்டியல் : காத்தான்குடியில் கொண்டாட்டம்

பழுலுல்லாஹ் பர்ஹான்-

2015 பாராளுமன்ற பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மாவட்ட முதன்மை வேட்பாளராக போட்டியிட்டு சுமார் 54 வாக்குகளால் தோல்வியடைந்த முன்னாள் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் சொந்த ஊரான காத்தான்குடி பிரதேசத்தில் மட்டக்களப்பு கல்முனை காத்தான்குடி பிரதான வீதியில் 21 இன்று வெள்ளிக்கிழமை மாலை பாரியளவில் மக்கள் மகிழ்ச்சி களிப்பில் ஈடுபட்டதோடு ஹிஸ்புல்லாஹ்வின் பதாதைகளை ஏந்தி ஊர்வலமாகவும் சென்றதோடு பட்டாசு கொழுத்தி ஆராவரம் செய்தனர்.

இம் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் இளைஞர்கள்,சிறுவர்கள்,பெரியவர்கள் உட்பட பெரும் திரளான பொது மக்கள் கலந்து கொண்டனர்.

இதனால் சிறிது நேரம் போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்துடன் பொலிசாரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -