அம்பாரை மாவட்டத்தில் தேர்தல் சட்டங்களை மீறி துண்டுப்பிரசுரம் பகிர்ந்த நான்கு பேர் கைது வேன் பறிமுதல்

எம்.எம்.ஜபீர்-

ம்பாரை மாவட்டத்தின் சவளக்கடை பொலிஸ் பிரிவில் தேர்தல் சட்டங்களை மீறி துண்டுப் பிரசுரங்கள் வினியோகித்த வளத்தாப்பிட்டியை சேர்ந்த 4 பேரையும், அவர்கள் பயணித்த வேனையும் சவளக்கடை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.
சவளக்கடை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த இரகசிக தகவலையடுத்து நேற்று சனிக்கிழமை இரவு சாளம்பைக்கேணி-05 5ஆம் கொளனி பிரதேசத்தில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டதாக சவளக்கடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எம்.எம்.நஜீப் தெரிவித்தார்.

திகாமடுல்ல மாவட்டத்தில் ஐக்கிய தேசிய முன்னணில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரின் ஆதாரவளர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும்இ சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையையும் சவளக்கடை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -